தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி துவக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுயஉதவிக்குழுவினர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார பெற்றுவருகின்றனர்.இதனை தொடர்ந்து சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்
வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்றநோக்கத்துடனும் மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப்
பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா
மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்மகளிர்சுயஉதவிக்குழுக்கள்தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள் இன்று (21.09.2024)துவக்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப.,அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப.,
அவர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 21.09.2024 முதல் 06.10.2024 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப்
பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட
பொருட்கள், மரச் சிற்பங்கள். மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்திட 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கெனதனி அரங்குகளும்அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என அறிவித்துள்ளனர்வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த சிறப்பானகலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.இத்தகைய சிறப்பு மிக்க விற்பனைக் கண்காட்சியை அனைவரும் கண்டு களித்து மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவிக்குழுக்களின்பொருளாதாரமுன்னேற்றத்திற்குஉதவிகேட்டுக்கொள்ளப்படுகிறது.