புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு கூட்டம்!!!

sen reporter
0


 புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு கூட்டம் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் முன்னிலையில் மதிப்பீட்டு குழு தலைவர் திரு ஏ எம் எச் நாஜிம் அவர்கள் தலைமையில் இன்று 01.10.2024 காலை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியிடங்களை உடனடியாக நிரப்புவது குறித்தும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து கையிருப்பு மற்றும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் திரு அ. ஜான்குமார் அரசு கொறடா திரு ஏ கே டி ஆறுமுகம் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு  கே எஸ் பி ரமேஷ் திரு சம்பத்  திரு பி எம் எல் கல்யாணசுந்தரம் திரு நேரு திரு வைத்தியநாதன் திரு வி பி ராமலிங்கம் திரு நாக தியாகராஜன் திரு செந்தில்குமார் திரு பிரகாஷ் குமார் மற்றும் அரசு நிதித்துறை செயலர் சுகாதாரத்துறை செயலர்  சட்டப்பேரவை செயலர் திரு தயாளன் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top