அன்புத் தங்கைகளே!!!
கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழக த்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு,உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லலொணா வேதனைக்கும் ஆளாகிறேன் யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது ? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே.அதற்காவே இக்கடிதம். எல்லாசுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணாகவும் அரணாகவும் எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் பாதுகாப்பன தமிழகத்தைப் படைத்தே திருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்.
