கோவை மாவட்டம் வால்பாறை பன்னி மேடு பகுதியில் வசித்து வந்தவர் மேரி வயது 76 யானை தாக்கி உயிரிழந்த மூதட்டி!!!

sen reporter
0

 கோவை மாவட்டம் வால்பாறை பன்னி மேடு பகுதியில் வசித்து வந்தவர் மேரி வயது 76 கடந்த 22ஆம் தேதி அதிகாலை இரண்டு மணி அளவில் இவருடன் அருகில் இருக்கும் ஒரு வயதான முதிய முதுமை பெண்ணும் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் யானை பின்புறமாக கதவை உடைக்கும் சத்தம் கேட்டு பயத்தில் முன் பக்க வழியாக கதவை திறந்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்து ஓடி செல்லும் போது பின்னாலே துரத்திய காட்டு யானை தன் தந்தத்தால் குத்தி சிறிது தூரம்எடுத்துச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் கூட இருந்த பெண்மணியும் மயக்கம் அடைந்து நிலையில் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் தகவல் அறிந்த வனத்துறையினர் இறந்த மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்து உடன் கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது இதுசம்பந்தமாக சம்பந்தமான உறவினர்களிடம் கேட்டபோது இவர் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை குறிப்பாக ரோடு , லைட், வசதிகள் இல்லை இத்தனைக்கும் இந்த வீட்டிற்கு பட்டா உள்ளது மேலும் இறந்த மேரி வீட்டிற்கு சற்று மேலே ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். யானைதாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த நாளே வீட்டை காலி செய்து விட்டு வாடகை வீட்டிற்கு சென்று விட்டார்கள். இதற்கும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க சம்பந்தமான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவருடன் சேர்ந்து தோட்ட தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top