மேலும், ‘பிரதம மந்திரி விலையில்லா வீடு’ (PMAY) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் நிரந்தர காண்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் 1,11,00,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், ‘பிஎம் ஜன் ஆரோக்ய யோஜனா – ஆயுஷ்மான் பாரத்’ (PMJAY-AB) திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் சிகிச்சை பெற்றுள்ளனர்., இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.80000 கோடி வரை சிகிச்சைச் செலவுகள் மத்திய அரசால் தாங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தினை 1400க்கும் மேற்பட்ட ‘ஜன் அவுஷதி கெந்திரா’ (JAKs) மூலமாக, 80% தள்ளுபடி விலையில் அவசியமான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர், இதன் மூலம் இந்த மாநில மக்களுக்கு ரூ.7000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முக்கியமாக, ‘பிஎம் கிசான் சன்மான் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விவசாயிகள் சுமார் ரூ.12,000 கோடி பெறந்துள்ளனர். இவற்றுடன், ‘பிஎம் பசல் பீமா யோஜனா’ (PMFBY) திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடாக சுமார் ரூ.14,800 கோடியை கோரியுள்ளனர்.தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில், ‘பிஎம் மத்தியா சம்பதா யோஜனா’ (PMMSY) திட்டத்தின் கீழ் முறையான நிதி ஆதரவு பெற்றுள்ளது. இதன் மூலம் குளிர்பதன களஞ்சியக் கொட்டகைகள் மற்றும் மீன் வளர்ப்பு மையங்கள் போன்ற நவீன வசதிகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக, கடந்த பத்தாண்டுகளில் 3700க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய உற்பத்தி தொடர்புடைய ஊக்கத்திட்டம் (PLI) தமிழ்நாட்டில் உள்ள மின்னணு தொழில்துறைக்கு மிகுந்த உதவியாக இருந்து, இந்தியாவை உலகின் 10வது பெரிய மின்னணு உற்பத்தியாளர் நாடாக மாற்றியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.மேற்கண்ட முயற்சிகள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘விக்சித் பாரத் @ 2047’ என்ற கனவை நிறைவேற்றும் பாதையில் தமிழ்நாட்டை நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார (ரூ.320 பில்லியன்) மாநிலமாக உருவாக்க உதவியுள்ளன.