இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மாணவர்களுக்கு என்னென்ன முறையில் பயிற்சி வழங்கலாம்? மாணவர்கள் எந்த பாடப்பிரிவை ஆர்வத்துடன் கற்கின்றனர் என அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஆய்வு கூட்டமானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து பேசும் போது அந்த மாவட்டத்தைச் சார்ந்த செயல்கள் குறித்து விளக்குங்கள். உங்கள் மாவட்டத்தில் பணியாற்றியது மற்றும் சாதித்து என்ன என்பதை சி.இ.ஓ விளக்க வேண்டும் அது மட்டுமின்றி பள்ளி கல்வித் துறையில் கற்பித்தல் மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் என்னென்ன புதிய திட்டங்கள் செய்துள்ளீர்கள்? என்பதனை தெரிவியுங்கள். அதனையும் பிற மாவட்டங்களுக்கு தெரிவித்து பின்பற்ற வைப்போம். அதேபோல், நாங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தகவல்களை பெற்றுள்ளோம். அதையும் பகிர்ந்து கொள்கிறோம். அனைத்து விஷயங்களுக்கும் ஒளிவு மறைவின்றி அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.
சென்னை:அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது!!!
6/23/2025
0
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் மாவட்ட அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்றும் (ஜூன் 23), நாளையும் (ஜூன் 24) ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), உதவி திட்ட அலுவலர் என தலா 5 பேர் பங்கேற்கின்றனர்.இந்த ஆலோசனையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மாணவர் சேர்க்கை, போக்சோ வழக்குகள், இடைநிற்றல் கண்காணிப்பு, அரசின் மாணவ நலத் திட்டங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்குவது, பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.