வேலூர்:ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி உடல் பாகங்கள் சிஎம்சி மருத்துவமனைக்கு தானம்!!!
June 08, 2025
0
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காரப்பட்டு ஆர். எஸ். அரங்கல் துருகம், சுட்டகுண்டா, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி எத்திராஜுலு (73). இவரது மனைவி உஷாராணி (58). இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலை 9 .15 மணி அளவில் ஆம்பூர் சாலையில் அரங்கல் துருகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கீழே தவறி விழுந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்து அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தார் இறந்த உஷாராணியின் உடலை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இதை தானமாக பெற்றுக் கொண்ட வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் ராணிப்பேட்டை கேம்பஸ் பகுதியில் சிறுநீரகங்கள் மற்றும் இவரது கண்களை எடுத்துக் கொண்டது. அதேபோன்று இவரது பிற உறுப்புகளும் சென்னையில் உள்ள பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறந்து போன உஷாராணியின் மகன் புஷ்பநாதன் (37). இவர் சென்னை கே எம் சி மருத்துவமனையில் OT மேலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோன்று இவருக்கு தேவகி (40) என்ற மகளும் ,லட்சுமி பிரியா (36) என்ற மகளும் உள்ளனர் .உறுப்புக்களை சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய குடும்பத்திற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது. இவ்வாறு வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.