தென்காசி மாவட்டம்:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேமுதிக சார்பில் நினைவு பரிசு!!!

sen reporter
0

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேமுதிக சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் மதியழகன், பொருளாளர் கோட்டூர்சாமி, செயற்குழு உறுப்பினர் குருவையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சோலை வி. கனகராஜ் மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் நாரணபுரம் கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் குமார், மாவட்ட ஐடி விங் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் சுப்பையா விமரிசையாக செய்திருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top