இந்நிலையில், கர்நாடகா கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு இரண்டு நாட்களாகிய நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. பிலிகுண்டுலுவை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து 6,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதனால், ஒகேனக்கல் சினி அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கலில் நீர்வரத்து 10,000 கன அடியாக உள்ள நிலையில் இன்று மாலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி:கனமழை எதிரொலி திறந்துவிடப்பட்ட கர்நாடக அணை ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு!!!
6/20/2025
0
தொடர்கனமழையால்கபினிஅணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது இதனால், தருமபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கபினி அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவந்தடைந்தது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 17 ஆம் தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
