தென்காசி:அருள்மிகு ஸ்ரீ சங்கரநயினார் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மாள் கோயிலில் வருஷாபிஷேக விழா!!!
June 07, 2025
0
தென்காசி அருள்மிகு ஸ்ரீ சங்கரனார் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மாள் கோயிலில் முதலாவது வருஷாபிஷேக விழா நடை பெற்றது காலையில் சிறப்பு யாகம்,சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது அதிகாலையில் கோயிலில் உள்ள விமான பகுதிகளில் விமானங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது இரவு பரதநாட்டிய நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது கோவிலில் ஏராளமான பெண்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர் காலையிலும் இரவிலும் பிரசாதம் வழங்கினர் மேலும் கோயிலில் கடந்த காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது காரணம் இது பரிகார ஸ்தலம் மட்டுமல்ல சிற்றாறு அருகில் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றே விளங்குகிறது இக் கோயிலில் வருபவர்கள் பரிகாரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வதால் அவர்கள் வாழ்வியலில் மாற்றங்கள் (திருமண தடை மற்றும் கடன் பிரச்சனை) இவைகளிடம் முன்னேற்றமும் ஏற்பட்டு வருவதால் வெளி மாநிலத்திலிருந்தும் அருகில் உள்ள ஊரிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் இது சம்பந்தமாக சிவனடியார் ஒருவர் கூறுகையில் குரு, சனி, ராகு, கேது பரிகார ஸ்தலம் தென் தமிழகத்தில் இது மட்டுமே.