நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா கலந்து கொண்டு மாணவர்களிடையே விடா முயற்சி,தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கமுடியும்எனகூறினார்.நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும்,இந்திய கிரிக்கெட் வீர்ரும் ஆன மருத்துவர் ஜெயகுமார் கலந்து கொண்டு, பள்ளியில் பயின்ற போது தம்முடைய அனுபவங்களை கூறி நினைவு கூர்ந்தார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளில் சிறந்துசெயல்பட்டமாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.பின்னர் ஸ்டேன்ஸ் பள்ளியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ்பள்ளிநிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் எனபலர்கலந்துகொண்டனர்.விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது...
