இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்றுத் துறையில் படிக்கும் ஆகாஷ் என்ற மாணவர் வந்துள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றவே லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அந்த மோதலில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில், இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக லட்சுமி நாராயணன் உட்பட 3 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் மீதும் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துவிசாரித்துவருகின்றனர். இதனிடையே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம்மூடப்பட்டது. திருநெல்வேலி மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரிஎனஐந்துமாவட்டங்களைச்சேர்ந்தஆயிரக்கணக்கான மாணவர்கள்இந்தபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மாணவர்கள் மோதல் காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூடப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி:மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை!!!
8/29/2025
0
மனோன்மணியம்சுந்தரனார்பல்கலைக்கழகத்தில்மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக போலீசார் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையைஅடுத்தஅபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இங்கு இரு சக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவு வாயில் அருகே பார்க்கிங் வசதி உள்ளது.இந்நிலையில் வரலாற்றுத் துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூரை அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழ வந்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (18) நேற்று தனது வாகனத்தை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கல்லூரி கேண்டீன் அருகில் நிறுத்தியுள்ளார். அதற்கு இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி வாகனத்தை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார்.
