கிருஷ்ணகிரி;ஓசூரில் ரூ.24,307 கோடி மதிப்பில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம் என மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!!

sen reporter
0

தமிழக வரைபடத்தில் அடையாளம் பெற்றஒருநகரமாகவும்,வளர்ச்சிமூலம்அனைவரின்தனிக்கவனத்தையும் பெறும் நகரமாகவும் ஓசூர் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொழில் துறையில் நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடித்து வருவதாக ஓசூரில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பெருமிதத்துடன்குறிப்பிட்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காக,  கிருஷ்ணகிரி மாவட்டம் வந்துள்ளார். இதற்காக, தனி விமானம் மூலம் ஓசூருக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்னிலையில், ரூ.24,307 கோடி மதிப்பீட்டிலான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெர்மனி, லண்டன் ஆகிய வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு, ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் திரும்பிய 3 நாட்களில் ஓசூரில் தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த தொழில் மாநாட்டில், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகின. இதன் மூலம் நமது சாதனைகளை நாமே முறியடிக்கிறோம். 8 ஆயிரம் நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஓசூர் திறமையும், புதுமையும் சந்திக்கும் நகரமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் வரைபடத்தில் அடையாளம் பெற்ற ஒரு நகரமாகவும், வளர்ச்சி மூலம் அனைவரின் தனிக்கவனத்தையும் பெறும் நகரமாகவும் ஓசூர் உள்ளது,” என்றார்.


மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு தொழில் துறை இந்த அளவுக்கு வேகமாக வளர துடிப்பான, இளமையான அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தான் காரணம். அமைச்சர் உள்ளிட்டோருக்கு டார்கெட் கொடுத்துள்ளேன். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பதை இலக்காக நிர்ணயித்தோம். அதற்கான கட்டமைப்பை சிறப்பான முறையில் மேம்படுத்தி, தொழில் செய்யும் சூழலை உருவாக்கி வருகிறோம்.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 4 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளோம். அந்த வகையில், நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காட்டை தாண்டியுள்ளது” என்றார்.


தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ.1,100 கோடி மதிப்பில் புதிய ஐடி தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். மதிய உணவை முடித்து விட்டு அங்கிருந்து நேராக கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தில் மாலை 3 மணிக்கு புதிய தொழிற்சாலையைதுவக்கிவைத்தார்.அதன் பின் மீண்டும் ஓசூர் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார். மேலும், நாளை கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (81) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குநாளைவெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒருநாள்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top