வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்சி /எஸ்டி வழக்குகளை விரைந்து முடிக்க கலந்தாய்வு கூட்டம்!!!
9/04/2025
0
வேலூர்மாவட்டகாவல்அலுவலகத்தில் 03.09.2025-ம் தேதி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் டாக்டர் பி. சாமுண்டீஸ்வரி, தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள எஸ்சி/எஸ்டி வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பணப் பலன்களை விரைந்து கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பள்ளி,கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவல் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
