முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர்,இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பல்வேறு துறைகளில் பின்தங்கி இருந்த நிலையில் தற்போது உலக நாடுகள் வரிசையில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.மருத்துவம்,கல்வி,கிராம நகர்ப்புற கட்டமைப்புகள்,அறிவியல் தொழில் நுட்பம், வேளாண்மை ,பயோ தொழில் நுட்பம் என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னனி நாடாக வளர்ந்து வருவதாக கூறிய அவர்,இந்தியாபுதியகண்டுபிடிப்புகளுக்கு காட்டிய ஆர்வமே நாட்டின் முன்னேற்றம்எனஅவர்தெரிவித்தார். குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் செயல்பாடு இருப்பதாக கூறிய அவர்,அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பல்வேறு புதிய திட்டங்களை பட்டியலிட்டு கூறினார்..
