கன்னியாகுமரி:தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!!
9/15/2025
0
தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன் என்றுகன்னியாகுமரியில் கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தின் கீழ் கழகத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாளான இன்று, "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் தீர்மானம் எடுக்கும் நிகழ்ச்சிகனிமொழிஎம்பிதலைமையில்நடைபெற்றது.முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்க்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்பால்வளமேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
