சென்னை:இங்கிலாந்து வாழ் தமிழர்களின் அன்பில் நெகிழ்ந்து போனேன்! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி பதிவு!!!

sen reporter
0

 ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து சென்றுள்ள தமிழகமுதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாகவரவேற்புஅளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கால் பதித்த போது தமிழர்களின் அன்பாலும், பாசத்தாலும் அரவணைக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த இங்கிலாந்து வாழ் தமிழர்கள், மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தள பக்கத்தில், "இங்கிலாந்தில் கால் பதித்த போது, தமிழர்களின் அன்பாலும், பாசத்தாலும் அரவணைக்கப்பட்டேன். அவர்களின் உற்சாக வரவேற்பு, பல்லாயிரம் மைல்கள் தூரம் கடந்து வந்தாலும், சொந்த மண்ணை போன்று உணர வைத்தது" என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஜெர்மனி நாட்டிற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர்சிறப்புரைஆற்றினார். மேலும், ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ரூ.3201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மூலமாக இந்தியா முழுவதும் தொழிலை விரிவுப்படுத்த BMW நிறுவனத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அப்போது, தமிழ்நாட்டின் வலுவான EV (மின்னணு வாகனங்கள்) உள்கட்டமைப்பையும் இந்தியாவில் தங்களுடைய விற்பனை அனுபவத்தையும் மேற்கோள்காட்டி BMW நிறுவனம் தமிழ்நாட்டுடன் தொழில் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.இது குறித்து, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் “தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம், தமிழ் உறவுகள் அளித்த அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்த பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்” எனவும் பகிர்ந்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top