கரூர்:தமிழ்நாட்டில் பாஜக நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்' கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!!!

sen reporter
0

இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறியிருக்கிறார்? என்று உங்களுக்கு தெரியும். அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுஅதிமுகஆட்சியைகாப்பாற்றியது பாஜக என்ற உண்மையை பேசி இருக்கிறார்.தமிழ்நாட்டில் பாஜக நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.திமுக சார்பில் முப்பெரும் விழா கரூர்-திருச்சி புறவழி சாலையில் உள்ள கோடங்கிப்பட்டியில் மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு தலைவருமான கனிமொழிக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.மேலும் அண்ணா விருது சுப.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரன், பாவேந்தர் பாரதிதாசன் விருது மறைந்த குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா. பழனிசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுடன் ரூ.3 லட்சத்திற்கான ரொக்க பரிசை வழங்கி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:என் உயிரோடு கலந்திருக்கின்ற உடன்பிறப்புகளுக்கு முதல் வணக்கம். திமுக எனும் இயக்கத்திற்கு ஓயாமல் உழைக்கும் உதயசூரியன் ஆகிய தொண்டர்களை பார்க்கும் பொழுது எனக்கு தனி உற்சாகம் வந்துவிடும். நான் திமுகவின் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு நீங்களே காரணம். இன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திராவிட மாடல் அரசை ஆட்சியில் அமர்த்தி என்னைமுதலமைச்சராகஉயர்த்தியதும் நீங்கள் தான்.முப்பெரும் விழா என்பது அறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக என்னும் இயக்கம் உருவான நாள் ஆகிய மூன்றையும் முப்பெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த விழாவானது நாம் வெற்றி பெற்று வந்த கரடு முரடான பாதைகளை திரும்பிப் பார்க்கவும், அடுத்து பெறப்போகும் வெற்றிக்காகவும் கூடி இருக்கிறோம்.திமுக வரலாற்றில் இப்படி ஒரு முப்பெரும் விழா இதுவரை நடந்ததில்லை. இதற்கு காரணம் கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தான். கோடு போடச் சொன்னால் ரோடு போடுபவர் செந்தில் பாலாஜி. அவரை அடக்கி ஒடுக்கி திமுக இயக்கத்தை முடக்கி விடலாம் என சிலர் தப்புக்கணக்கு போட்டார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறது. சாதாரண வெற்றி அல்ல. இது எதிரிகளை கலங்கடிக்கும் வெற்றி.


இந்த வெற்றி 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நிச்சயம் தொடரும். கழகத்திற்காக தொண்டர்கள், தொண்டர்களுக்காக கழகம் என திமுக இயங்குகிறது. இதை எந்த கொம்பானலும் அழிக்க முடியாது.திமுக என்னும் இயக்கத்திற்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பேறு. 2026 சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு திமுக தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.2000 ஆண்டுகளாக காவி கொள்கைக்குஎதிராகபோராட்டம்தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர்ந்து அமைந்தது என்கிற வரலாற்றை படைக்க வேண்டும். அந்த வரலாற்றை நாம் படைக்கலாமா? கூறுங்கள். நீங்கள் தயாராகி விட்டீர்களா? அதற்காக தான் ''ஓரணியில் தமிழ்நாடு'' என்கிற பரப்புரையை நாம் முன்னெடுத்து கிராமந்தோறும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைத்துள்ளோம்.ஒரு கோடி புதிய திமுக உறுப்பினர்கள் எந்த நம்பிக்கையில் திமுகவில் இணைந்துள்ளார்கள்? என்றால் தமிழ்நாட்டை காக்கும் அரண் திமுக 'திராவிட மாடல்' அரசு என்ற நம்பிக்கை தான். தமிழ்நாட்டுக்கு இடையூறு செய்யும் கொள்கை எது? என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது காவி கொள்கை தான். 2000 ஆண்டுகளாக காவி கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்ற உண்மையை பேசி இருக்கிறார்.


தமிழ்நாடு அரசை, திமுகவை தொடர்ந்து மிரட்டி வரும் பாஜகஅந்த கைப்பாவை அதிமுக அரசை வீழ்த்தியது திமுக தான் என்ற வன்ம வார்த்தைகளை பாஜக கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து தமிழக அரசை, திமுகவை மிரட்டி வருகிறது பாஜக. அந்த மிரட்டலை கண்டு நாம் பயப்பட போவதில்லை. இந்தியாவிலே ஒரு மாநிலக் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது என வரலாற்றை படைத்தது திமுக தான். அதன் பிறகு வந்த திமுகவில் உதயமான கட்சிகள் திமுகவை அழிப்போம் என பிரச்சாரம் செய்தார்கள்.ஏன் இப்பொழுதும் கூட சில பேர் பேசி வருகிறார்கள். திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என பேசி வருகிறார்கள். எதை மாற்றப் போகிறார்கள். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை மாற்றி அமைத்து பின்னோக்கி கொண்டு செல்ல பார்க்கிறார்கள். திமுகவை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா? மாற்றம் என்று பேசி கட்சி துவங்கியவர்கள் மறைந்து போனார்கள். ஆனால் திமுக என்ற கட்சி மக்கள் மனதில் இருந்து மறையவில்லை.


இதனால் தான் திராவிட மாடல் அரசை பார்த்தால் வயிற்றெரிச்சல் வருகிறது. மக்களை பார்த்து அவர்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்டை பார்த்து, ஓநாய் வடிக்கும் கண்ணீர். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு இல்லாமல் முதலமைச்சராகிய என்னை ஒருமையில் பேசி வருகிறார். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.


திராவிடம் என்றால் என்னவென்று தனக்குத் தெரியாது என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. இன்று அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதிமுக துவங்கிய போது அதன் கொள்கை அண்ணாயிசம் என்று கூறினார்கள். அதை எடப்பாடி பழனிசாமி தற்போது அடிமை விஷம் என மாற்றிவிட்டார். அமித்ஷாவே சரணம் என சரண்டர் ஆகிவிட்டார். டெல்லியில் நேற்று கார் மாறி சென்ற பழனிச்சாமியை பார்த்து முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று கூறுவார்கள். அது போல காலிலே விழுந்து விட்டு கர்ச்சீப் வைத்து மறைப்பது எதற்கு?

தமிழகஎம்.பிஎண்ணிக்கையைகுறைக்கபாஜகஅரசுமுயற்சிதமிழகத்தில் தொகுதி வரையறை என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க பாஜக ஒன்றிய அரசு முயற்சி செய்தது. ஆளுநரை வைத்து திமுக அரசுக்கு எதிராக செயல்பட வைத்தார்கள். அதை எதிர்த்து செயல்பட்டோம். இப்படி ஒன்றிய அரசுக்கு எதிராக நாம் போராடி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து தலை நிமிர வைத்துள்ளோம். தமிழ் மண்ணை காக்கக்கூடிய பொறுப்பு திமுகவுக்கு தான் உள்ளது. இந்து திணிப்பை பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டில் பாஜக நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும். நம் உரிமைகள் பறிபோக நீங்கள் அனுமதிக்க கூடாது. இந்து திணிப்பு வந்தபோது எப்படி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தி நம் தமிழ் மொழியை காப்பாற்றினோமோ, உரிமைகளை காப்பாற்றிட நாம் அனைவரும், இணைந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தில் முன் கள வீரனாக நான் இருக்கின்றேன். 23 வயதில் எப்படி மிசா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றேனோ, அதே போராட்ட குணத்தோடு நான் உங்களோடுஇருக்கின்றேன்.இந்த மேடையில்இருந்துபொதுமக்கள்மற்றும் பெண்களுக்குநான்உறுதியளிக்கின்றேன்.உரக்க சொல்வோம். தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானதை பார்த்து பார்த்து நான் செய்து கொடுப்பேன். எட்டு கோடி மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. இதே உறுதியுடன் திமுக தொண்டர்கள் இணைந்து போராடுவோம். இந்தப் போராட்டம் ஒரு கட்சிக்கான போராட்டம் அல்ல. முதலமைச்சர் பதவிக்கான போராட்டம் அல்ல. ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்காக தமிழ்நாடு முழுக்க ஓரணியில் திரள வேண்டும். தந்தை பெரியார் பிறந்தநாளில் கரூர் மண்ணிலிருந்து உரக்கச் சொல்வோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். அனைவரும் டெல்லிக்கு கேட்கும் வகையில் உரக்க கூறுங்கள். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். இவ்வாறு திமுக தலைவரும்,தமிழகமுதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்பட தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக முப்பெரும் விழா நடைபெற்று முடிந்ததும் கொட்டும் மழையில் திமுக தொண்டர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முக்கிய அமைச்சர்கள் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top