எட்டயபுரம்:பத்தாம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!!
9/24/2025
0
பத்தாம்வகுப்புபாடத்தில்கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் என எட்டயபுரம் அரசர் குறித்த பிழையை திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில்வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு திருத்த வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரத்தில் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எம். ராஜா தலைமையில் பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. உமறுப்புலவர் சங்கத் தலைவர் உ. காஜா மைதீன் முன்னிலை வகித்தார். எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னர் ராஜ ஜெகவீர முத்து தங்க குமார ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் சந்திர சைதன்ய ராஜா பங்கேற்று, எட்டயபுரம் சமஸ்தானம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்த சிறப்புவாய்ந்தமிகப்பெரியசமஸ்தானம்என்றுபேசினார்.ஆர்ப்பாட்டத்தில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எட்டயபுரம் வர்த்தகர்கள்சங்கம்,தமிழ்நாடுவணிகர்சங்கங்களின்பேரமைப்பு,உமறுப்புலவர் ஜமாத் நிர்வாகம், அனைத்து சமுதாய தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
