வேலூர்:காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் கொலு கண்காட்சி!!!
9/24/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கெங்கை அம்மன் கோவில் தெருவில் பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் விஜயலட்சுமி. இவர் தனது இல்லத்தில் கொலு கண்காட்சி வைத்துள்ளார். இதனை அருகில் உள்ள வீடுகளில் இருந்து வரும் பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கு மாலை வேலைகளில் சிற்றுண்டி அளித்து உபசரிக்கிறார் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொலு கண்காட்சி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
