எடப்பாடி பழனிசாமி மரியாதை!சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.அதிமுகபொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு நாளையொட்டி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!!!
10/16/2025
0
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,ஆதிக்கத்திற்குஅடங்கிப்போக மறுத்துபடைத்திரட்டிபோரிட்டுபார் போற்றும் வீரவரலாறு படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.எதிரிகளும் போற்றிய வீரம் - பகைவரை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிச்சல் - சூழ்ச்சிகளை வீழ்த்தும் செயல்திறன் இதுவே கட்டபொம்மன் வாழ்க்கை சொல்லும் பாடம். வாழ்க அவரது புகழ். என தெரிவித்துள்ளார் .
