தஞ்சாவூர்:பாமக நிர்வாகியை கொல்ல முயன்ற சம்பவம் கைது செய்யப்பட்ட 15 பேரில் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு!!!

sen reporter
0

தஞ்​சாவூர் மாவட்​டம், திரு​விடைமருதூர் வட்​டம், ஆடு​துறை மேலமருத்துவக்குடி பகுதியை சேர்ந்​தவர் ம.க.ஸ்​டா​லின். ஆடு​துறை பேரூ​ராட்​சி தலைவ​ரான இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்​வாக குழு உறுப்​பின​ராகவும் உள்​ளார். இந்​த நிலை​யில் கடந்த மாதம் 5 ஆம் தேதி பேரூராட்சி அலு​வல​கத்​தில் இருக்கும் தனது அறை​யில் ம.க.ஸ்​டா​லின் அமர்ந்து இருந்தார். அவரது ஆதரவாளர்​களான இளை​ய​ராஜா (42), அருண் ​(25) ஆகியோர் வெளியில் இருந்தனர்.அப்போது, திடீரென ஒரு காரில் வந்த 8 பேர் முகமூடி அணிந்து அலு​வல​கத்​தில் புகுந்​து நாட்டு வெடிகுண்​டு​களை வீசினர். இதில், பேரூராட்சி அலுவல​கத்​தில் இருந்த நாற்​காலி மற்றும் கண்​ணாடிகள் சேதம் அடைந்​தன. இதைத்தொடர்ந்​து அலு​வல​கத்​துக்​குள் நுழைய முயன்ற கும்​பலை தடுக்க முயன்ற இளை​ய​ராஜா, அருண் ஆகியோரை அவர்கள் அரி​வாளால் வெட்டினர். இதை கண்டு அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ம.க.ஸ்​டா​லின் நைசாக தனது அறை​யில் உள்ள கழிப்​பறைக்​குள் சென்​று​விட்​டார்.பேரூராட்சி அலுவல​கத்​தில் உள்ளே நுழைந்த கும்பல் ம.க.ஸ்​டா​லின் தனது இருக்​கை​யில் இல்​லாததை அறிந்ததும் உடனே அங்​கிருந்து காரில் தப்பிச் சென்​று​விட்​டது. இதுகுறித்து அருண் அளித்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 15 நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரு கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 6 பட்டா கத்திகள், 2 செல்போன்கள் ஆகியவைபறிமுதல்செய்யப்பட்டது. தமிழகம் தழுவிய அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரில் முக்கிய குற்றவாளிகளான ஆகாஷ் (எ) ஹரிஹரன், மருதுபாண்டியன், மகேஷ், திருவிடைமருதூர் ரயில்வே சாலையை சேர்ந்த சேரன், பிச்சை கட்டளையை சேர்ந்த சஞ்சய், கும்பகோணம் பாணாதுறை பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top