திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. விழாவில் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்து, பதிவேடு புத்தகத்தில் கையெழுத்தை புதிவு செய்தார். பின்னர் தீயணைப்பு வாகனத்தை கொடி அசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் .இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாவட்ட இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் பழனி, மாவட்ட துணை அலுவலர் ஜாஸ்மின், மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன் கிழக்குஒன்றியசெயலாளர்கோ.குமரபாண்டியன், பேரூராட்சி செயலாளர் எம்.ஜாகீர் ஹூசேன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள், பேரூராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர்:பள்ளிகொண்டாவில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு விழா!!!!
10/13/2025
0
