மதுரை: இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானு உத்தரவையும் நீதிபதி விஜயகுமார் உறுதிப்படுத்தினார்!!!

sen reporter
0

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி மூன்றாவது நீதிபதி விஜயகுமார்உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சுல்தான்சிக்கந்தர்தர்கா,அதன் முன்புறமுள்ளகொடிமரம்,நெல்லித் தோப்பு அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்ட நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஆடு, மாடு, கோழி பலியிட தடை கோரி பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ராமலிங்கம் என்பவர் நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது மறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.இதையடுத்து வழக்கு மூன்றாவது நீதிபதி விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக தனி நீதிபதி தனது விசாரணையை தொடர்ந்து நடத்தினார்.இந்நிலையில் தனி நீதிபதி இன்று வழங்கி உள்ள தீர்ப்பில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, பலியிட தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானு உத்தரவையும் நீதிபதி விஜயகுமார் உறுதிப்படுத்தினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top