வேலூர் மாவட்டத்தில் பெருமுகை, அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளி, சாய்நாதபுரம் என்.கே.எம், டான்பாஸ்கோ, பேரணாம்பட்டு நுசருத்துல் இஸ்லாம் ஆகிய அரசு நிதிஉதவி பள்ளிகள், வ.உசி.நகர், எட்டியம்ன் கோயில், ஏரிப்புதூர், பெரிய தாமல் செருவு ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் வேலூர் ஆர்.என்.பாளையம், ஊசூர் மகளிர், வேலப்பாடி மகளிர், கொசப்பேட்டை, பொய்கை மகளிர், காங்கேயநல்லூர் ஆண்கள் மற்றும் மகளிர் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மேலும் துளிர் காந்திநகர், பி.கேபுரம், அமைதிபூங்கா, ஆகிய நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் மேல்மொணவூர், எட்டியம்மன் கோயில், பென்னாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும், குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளி என மொத்தம் 31 மையங்களில் 878 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர்.இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது… தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் அடிப்படையில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 65000 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்பட்டது. நான்கு விடைகளிலிருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் வகையில் தொடக்க நிலை மாணவர்களுக்கு 50 கேள்விகளும் மற்ற மூன்று நிலை மாணவர்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்பட்டது. தொடக்க நிலை 4 மற்றும் 5ஆம் வகுப்பு இளநிலை 6,7,8ஆம் வகுப்பு, உயர்நிலை 9,10 வகுப்பு மேல்நிலை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என 4 நிலைகளில் கேள்வித்தாட்கள் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது. மாணவர்கள் விடையளிக்க ஓ.எம்.ஆர். முறையில் சரியான விடைக்குரிய வட்டத்தை பென்சில் அல்லது பேனாவினால் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மாணவர்களுக்கு 5 இலக்க தேர்வு எண் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர்.
தேர்வெழுதும் 4,5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குழந்தைகள் துளிர் என்ற மாத இதழ் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களக்கு விஞ்ஞான துளிர், அல்லது ஜந்தர்மந்தர் தமிழ் அல்லது ஆங்கில அறிவியல் இதழ் 11 மாதங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாக்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர் மந்தர் ஆங்கில இருமாத இதழ் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா, விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றும் பாராட்டுக் கேடயம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
