திருவண்ணாமலை:செய்யாறு 29-ம் நாளான கலைஞர் சிலை அருகே அன்னதானம் வழங்கல்!!!
1/29/2026
0
செய்யாறு கலைஞர் சிலை அருகே 29ம் நாளான நேற்று மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகாஜனம்பாக்கம் புருஷோத்தமன்ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் ஞானவேல் ஆகியோர் முன்னிலையில் அன்னதான வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வழக்கறிஞர் அசோக், மாவட்ட மருத்துவர் அணிய அமைப்பாளர் சி. மகேந்திரன், இளைஞர் அணி பொறுப்பாளர்களான துரை, எஸ்.எஸ்.குமார், சிலம்பரசன், கல்பட்டு பிரகாஷ், மணிகண்டன், ஏழுமலை, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதையடுத்து புரிசை சிவக்குமார், கிளைக் கழக செயலாளர் தர்மலிங்கம்,கவுன்சிலர் கோவேந்தன் மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்களான பாண்டியன், சூரிய பிரகாஷ், கோபு ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை உண்டா பொதுமக்கள் மனதார வாழ்த்தி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
