வேலூர்:காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!!
1/29/2026
0
சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து போக்குவரத்து மாத விழாவினை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியை 10.30 மணியளவில் காட்பாடி காந்திநகர் கங்கேயநல்லூர் சந்திப்பு சாலையிலிருந்து புறப்பட்டது. காட்பாடி சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார். சாலை உபயோகிப்போர் குழுமத்தின் டாக்டர் அ. மு. இக்ரம், காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், ஆர் ஐ சி டி கல்வி நிறுவன இயக்குனர் டாக்டர்.கே.எஸ்.அசரப், போக்குவரத்து காவல் குழுமத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலாளர் பி.என்.ராமச்சந்திரன், காட்பாடி ரெட் கிராஸ் அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கர், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பரத், டாக்டர் வீ.தீனபந்து, பொருளாளர் வி.பழனி, தணிகை செல்வம், டீகாராமன், பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியர் பிரசாந்த், மாணவர்கள் 150 பேர் பேரணியில் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி காந்திநகர் கல்யாண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்டு சில்க் மில் சாலை சந்திப்பு வழியாக ஓடைபிள்ளையார் கோயில் சாலை சந்திப்பு, ஆக்சிலியம் கல்லூரி சாலை சந்திப்பு வழியாக மீண்டும் கல்யாண மண்டபம் சந்திப்பில் நிறைவு பெற்றது. பங்கேற்ற மாணவர்கள் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவோம் நம் உயிரை பாதுகாப்போம், சாலை விதிகளை மதிப்பேன் உயிர் இழப்பை தடுப்பேன், சாலை சாகசம் செய்வதற்கல்ல, என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர் பங்கேற்ற மாணவர்களுக்கு தண்ணீர் பிஸ்கெட் ,குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.
