அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் (APCC) குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (PICU) ஆரம்பம்
ஒரு மாதம் முதல் 16 ஆண்டுகள் வரையிலான குழந்தைப் பருவ புற்று நோய்களுக்கு சிறப்பு சிகிச்சையான நம்பிக்கையின் ஹீரோக்கள் என்பதை உருவாக்க இணைந்து செயல்படவிற்கும் APCC மற்றும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி
சென்னை ஜூன் 27 2003 தென் கொரியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டின் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு(PICU) தொடங்கி இருக்கிறது. நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்று பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்
பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் புற்று நோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு ஹர்ஷத் ரெட்டி, ரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலுரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயில் குழந்தைகள் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை- நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பான புற்றுநோய் சிகிச்சை குழந்தைகளுக்கு வழங்குவது APCC-ன் நோக்கம் என்பதால் PLCU-ன் தொடக்கம் இம்ம மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த விரிவான மற்றும் சிறப்பான எதிர்நத்துவத்தை கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவ குழுவை இப்பிரிவு கொண்டிருக்கிறது. செவிலியர்கள் மற்றும் மருத்துவத் துணைப் பணியாளர்களுக்கு இந்த அமைவிடத்திலேயே குழந்தைகளுக்கான மேம்பட்ட உயிர்க்காப்பு ஆதரவு பயிற்சி திட்டம் (PALS) தொடங்கப்பட்டிருப்பதையும் APCC அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி. பி. கீதாஜீவன் பேசுகையில் " குழந்தைகளுக்காக புற்று நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை வழங்குவதில் APCC கொண்டிருக்கும் அறப்பணிப்பை பெரிதும் பாராட்டினர். " அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கும் இவ்விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் சிகிச்சை வழங்கலில் தமிழ்நாடு மாநிலம் நீண்ட காலமாக கொண்டிருக்கும் தலைமைத்துவ திறனுக்கு இது மற்றுமொரு புற்றுநோயை எதிர்த்து போராடும் சிறார்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளில் உயர்நேர்த்தி நிலையை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையை புதிய பிரிவை தொடங்கியிருப்பதன் மூலம் APCC எடுத்திருக்கிறது.
அப்போலோ புரோட்டின் கேன்சர் சென்டரின் தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஸ்ருதி கக்கலாரா கூறியதாவது. " குழந்தைகளுக்கான புற்று நோய்கள் நவீன தொழில்நுட்பத்தையும் சிகிச்சைகளையும் வழங்குவதில் APCC- ல் பெருமிதம் கொள்வோம். மேம்பட்ட உயிர்காப்பு ஆதரவு தொழில்நுட்பம் கண்காணிப்பதற்கான சாதனங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் PICU, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ பணியாளர்களைக் கொண்டு 24×7 அடிப்படையில் சேவைகளை வழங்கும் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் மற்றும் பிற உடல் நலப் பிரச்சினைகளுக்கு எதிரான யுத்தத்தில் இப்புதிய பிரிவு புரட்சிகர மாற்றத்தை சாத்தியமாக்கும்.
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் ரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, இத்தொடக்க விழா நிலையில் கூறியதாவது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதில் PICUs இன்றியமையா பங்காற்றுகின்றன. குழந்தை நோய்களின் தனித்துவமான தீர்வு அளிக்க பல்வேறு துறைகளில், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் களை உள்ளடக்கிய ஒரு குழு புதிய பிரிவில் பணியாற்றும். மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களும் இங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நோயாளிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள், மருத்துவ நிபுணர்களுக்கு பெரிதும் உதவும்.
அப்போலோ ஹாஸ்பிட் டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் குழு புற்று நோயியல் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு ஹர்ஷத் ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், " சாத்தியமுள்ள மிக உயர்ந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்க APCC -ல் நாங்கள் உறுதி கொண்டிருக்கின்றோம். குழந்தைகளில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிகவும் நுட்பமான, சிரமமான செயல்முறையாகும். புற்று நோய்க்கான சிகிச்சை வழங்குவதோடு நிறுத்தி விடாமல், குழந்தைகளுக்கான பிரத்யேக தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி இருப்பது நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்குவதற்கு எங்களுக்கு உதவும். மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் நிறுவி, இந்தியாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிக நேர்த்தியான சிகிச்சை வழங்குவதே அப்பல்லோவில் எங்களது இலக்காக இருக்கிறது. குழந்தைகளுக்கு மிக விரிவான முழுமையான சிகிச்சையை வழங்குவதற்கு குழந்தைகளுக்கான முதன்மையான சிறப்பு மருத்துவர்கள் குழு உடனும் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுடனும் இணைந்து ஒத்துழைப்புடனும் செயல்பட நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் " என்று கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளால் உருவாக்கப்பட்ட அற்புதமான கலை படைப்பை இந்த புதிய PICU பிரிவு கொண்டிருக்கிறது. " செல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறை தலைவர் டாக்டர் லட்சுமி பிரியா டேனியல் அவர்களின் கற்பனை திறனால் " நம்பிக்கையின் ஹீரோக்கள்" (" HEROES OF HOPE") என்ற கருப்பொருளின் கீழ் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்பிற்கு மாணவிகள் உயிரோட்டத்தை தந்திருக்கின்றன. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்க நிகழ்வின் போது மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவன் இக்கலை படைப்பை திறந்து வைத்தார்.
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் ஓவியம் உட்பட கலை படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் செல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர் லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினர். அவர் பேசுவையில், " அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப் படைப்புகளை உருவாக்க இது ஒரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும். நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்களின் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன் கலைக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் கலைப்படைப்புகளை இடம்பெறச் செய்வதன் மூலம் நோயாளிகளின் உணர்வு ரீதியான நலத்தை பேணி வளர்க்கும் ஒரு நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும். நோயாளிகள் மனதில் நேர்மறை உணர்வை இது பதிய வைப்பதோடு, நோய் பாதிப்பிலிருந்து மீண்டும் குணமடைகி ன்ற அவர்களது ஒட்டுமொத்த செயல்முறையையும் கலை நிச்சயமாக மேம்படுத்தும் " என்று குறிப்பிட்டார்.
புற்றுநோய் சிகிச்சையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை வழங்குவதற்காக இந்த மிக நவீன பிரிவினை நிறுவப்பட்டிருப்பதன் வழியாக தனது சேவையின் பரப்பி அப்பல்லோ கேன்சர் சென்டர் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது.அப்பல்லோ புரோட்டோன் கேன்சர் (APCC) சென்னை இந்தியா
அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது. மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும். தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெராபி சென்டர் என்று பெருமைக்குரியது JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது. புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான APCC-ன் அணுகு முறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல் தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேன்மை குழுவாக (CMT) உருவாக்க ஒன்றிணியும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள் ஒவ்வொரு CMT-யும், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய - ரோபோட்டிக் புற்று நோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்திருக்கிறது.