நாகர்கோவில் மாநகராட்சி 34 வது வார்டு பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் நாகர்கோவில் மாமன்ற மேயர் ரே. மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். செப்பனிட படாமல் இருக்கும் சாலைகளை ஆய்வு செய்தார். சாலையோரம் வளர்ந்து இருக்கும் மரங்களில் அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார் .இந்த ஆய்வில் தனிநபர் ஒருவர் தனது வீட்டுக்கான செப்டிக் டேங்கை சாலையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது இதை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் பழுதுபடைந்த சாலைகள் உடனடியாக செப்பனிடப்படும் என்றும் புதிய சாலைகள் உரிய முறையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார் இந்த ஆய்வின்போதுமாநகர திமுக செயலாளர் வக்கீல் ஆனந்த் பகுதி பொறுப்பாளர் சேக், ஜீவா தொண்டரணி எம் ஜே. ராஜன் நகரத் துணைச் செயலாளர் வேல்முருகன் வழக்கறிஞர் சதாசிவம் வட்டச் செயலாளர்கள் ஜானகிராமன், ராமகிருஷ்ணன் நவீன்குமார் மற்றும் அருள் செல்வின் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.