கிழக்கு கடற்கரை சாலையில் முன்னாள் சென்ற கார் மீது பைக் மோதியதில் மூதாட்டி பலி

sen reporter
0

 நீலாங்கரை.ஜுன்.21:

                         சென்னை பாலவாக்கம் காந்திநகர் 3வது தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் இவரது மனைவி நளினி(65) இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். பாலவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது பைக் மோதியது.இதில் நிலை தடுமாறி நளினி கீழே விழுந்தார்.

இதில் தலை,கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.இதனை பார்த்த பகுதி மக்கள் அவரை மீட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நளினி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top