குமரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக இரணியல் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் கேடயம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இரணியல் காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான முதலமைச்சர் கேடயத்தை இன்று 27-06-23 சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர். செ. சைலேந்திரபாபு இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமாரிடம் கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினார். இதற்காக சிறப்பாக பணியாற்றிய இரணியல் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பாராட்டினார்.