தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்குகிணங்க. நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடமாடும் அங்கன்வாடிகள் செயல்படுத்தப்படும் என நாகர்கோவில் மேயர் மகேஷ் வடசேரி பேரூந்து நிலைய ஆய்வுக்கு பின்னர் தெரிவித்தார்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தினமும் காலை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் ஏற்கனவே ஒரு சுற்று முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது சுற்றாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இதன்படி இன்று 14 வது வார்டுக்கு உட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் இங்கு ரூபாய் 4 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதரவற்றோர் தங்குவதுக்கான கட்டிட பணியையும் ஆய்வு செய்தார்.
பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கட்டிடங்களையும் ஆய்வு செய்த பின் பிளாட்பாரங்களில் தங்கி இருந்த உடல்நலம் பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களைஅபய கேந்திரமும் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் பிளாட்பாரத்தில் இதுபோன்று யாரும் என் தங்கக்கூடாது அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் நடமாடும் அங்காடிகள் மூலம் பொது மக்களுக்கு குறைவான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்யும் வகையில் நடமாடும் அங்காடிகளை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் இதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கொரோனா காலத்தில் நடமாடும் அங்காடிகள் செயல்பட்டது.
இது பொது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது தற்போது முதலமைச்சரின் உத்தரவுப்படி தொடர்ந்து இது போன்ற அங்காடிகள் நாகர்கோவில் மாநகராட்சி மூலம் செயல் பட ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி இது குறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கிடைக்க வழிவகுக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஆய்வின் போது 14 ஆவது வார்டு உறுப்பினர் கலாராணி நகர துணை செயலாளர் வேல்முருகன் நகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் தொண்டரணி எம்.ஜே. ராஜன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.