கால்வாய் பகுதியில் தடுப்புசுவர்கள் கட்டும் பணி துரிதப்படுத்த வேண்டுகோள் .

sen reporter
0

 கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்படும் மண் சிதைவை அடுத்து கால்வாய் பகுதியில் தடுப்புசுவர்கள் கட்டும் பணியை துரிதப்படுத்த நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பி. கோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கன்னியாகுமரி மாவட்டம்  பேச்சிப்பாறை பிரதான கால்வாயில் இருந்து பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சாமியார் மடம் பகுதியில் உள்ளது. இந்த பிரதான கால்வாய் பகுதியில் சுமார் மூன்று இடங்களில் மண் சரிவு அடிக்கடி ஏற்பட்டுகிறது இதனால் பட்டணம் கால் கடை வரம்பு நிலங்களுக்கு தண்ணீர் வர இயலாத நிலை  இருந்தது வந்தது.

 இதில் சாமியார் மடம்  பகுதியில் 60 அடி நீளத்துக்கு  இரண்டு பக்கங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு கால்வாய் அடைக்கப்பட்டு விட்டது  . இதை அடுத்து நீர்வளத்துறை அமைச்சகம்  தற்போது இந்த பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் மூடி அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.

 பணி நடைபெறும்  பகுதியை  மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பி கோபால் கீழ்மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்  துரைராஜ் ஆகியோர்  பார்வையிட்டு அதிகாரிகளிடம் தற்போது அணையிலிருந்து தண்ணீர் விவசாயப்பணிக்காக திறந்து விடப்பட்டுள்ளதால். விவசாய பணிகள் பாதிக்காத வண்ணம் கட்டுமான  பணியை வேகமாக முடிக்க கோரிக்கை வைத்தனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top