மோகனூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார் வாகனம் மோதியதாக நாடக மாடியது அம்பலமாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லியம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி வயசு 37
இவருடைய மனைவி பிரேமா இவர்களுக்கு அனீஸ் ஆகாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிபாளையம் பகுதியில் ஒரு வளைவில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும் பிரேமா காயம் என்று தப்பியதாகவும் கூறப்பட்டது இச்சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதற்குரிய பிரேமாவிடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் தனக்கு நள்ளிரவில் காதில் வலி ஏற்பட்டதாகவும் மோகனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல கணவரை அழைத்துச் சென்றதாகவும் கூறினார் அப்போது நடந்த விபத்தில் பெரியசாமிக்கு இறப்பு ஏற்படும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது பிரேமா காயம் இன்றி தப்பியதாகவும் கூறிய தகவல் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது அதன் பிறகு பிரேமாவின் நடவடிக்கையே போலீசார் கண்காணித்தனர் போலீசாரின் கழுகு பார்வையில் இருந்து பிரேமாவால் தப்ப முடியவில்லை அதாவது கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரியவந்தது
உடனே போலீசார் பிரேமாவிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான.
பெரியசாமி கட்டிட மேஸ்திரி ஆக இருந்தாலும் பிரேமா மோகனூரில் உள்ள தனியார் பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார் அப்போது அங்குள்ள ஒரு நபருடன் கடந்த நாலு மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
இதனை அறிந்த பெரியசாமி மனைவியை கண்டித்து உள்ளார் அப்படி இருந்தும் அந்த நபர்களுக்கான கள்ளக்காதலை பிரேமாவால் விட முடியவில்லை. இதற்கு இடையேஅந்த பேக்கரியில் இருந்து பிரேமாவையும் அவளுடைய கள்ளக் காதலனையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
*சந்திக்க முடியாமல்* *தவிப்பு*
அதன் பிறகு பிரேம வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் செல்போனில் மட்டுமே கள்ளக்காதலனுடன் பிரேமா பேசிய வந்தார் நேரில் சந்திக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் எனவே கணவனை கொலை கொலை செய்தால் மட்டுமே கள்ளக்காதலனை சந்திக்க தடை இருக்காது என பிரேமா நினைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கள்ளக்காதல் என்னிடம் கூறியுள்ளார் இருவரும் சேர்ந்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தனர். அதன் பிறகு இரவில் காது வலிக்கிறது என்று பிரேமா கணவனிடம் கூறவும் அவரும் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தயாராகி உள்ளார் இதற்கு இடையே பிரேமா தனது கள்ளக் காதலனுக்குதகவல் கொடுத்துள்ளார்.
*தீர்த்து கட்டினார்*
மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் பிரேமாவின் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார் அவர் பெரியசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இருந்தார் அதன் பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்து விட்டதாக பிரேமா தகவல் கொடுத்துள்ளார். கள்ளக்காதலன் தப்பி சென்று விட்டார்
இதற்கு இடையே போலீசாரின் ரகசிய நடவடிக்கையில் பிரேமா கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பெரியசாமி கொலையில் பிரேமா அவருடைய கள்ளக்காதலனுக்கு மட்டும் தான் தொடர்பா?
அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசா விசாரணையை முடக்கி விட்டுள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது