இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை இன்று சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை மற்றும்
மணிமேகலை" காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
