அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50 சதவீத கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது.
அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் எந்த தகுதியும் இல்லாதவர்களை நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதி குறைவாக நியமிக்கப்பட்ட 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தகுதிக்கேற்ப பணி வழங்க அரசு முடிவு செய்யும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
