திருப்பூர் மாவட்டம்: மலேசியாவில் சிக்கி தவிக்கும் பெண்ணை காப்பாற்ற கலெக்டரிடம் நிதி வழங்கி உதவிய இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம்!!!
11/17/2023
0
திருப்பூர் தெற்கு வட்டம் ஆண்டிபாளையம் அருகே குளத்துபுதூர் பிள்ளையார் கோவில் தெருவில் கதவு எண் 1/60 பி கொண்ட முகவரியில் வசித்து வரும் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் மலேசியா நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவி தனலட்சுமி என்பவரை தமிழ்நாட்டிற்கு மீட்டுவர திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உதவி கோரி மனு கொடுத்திருந்தார்.இந்த செய்தி அறிந்து மலேசியா நாட்டிலிருந்து தனலட்சுமியை மீட்க இந்திரா சுந்தரம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 50ஆயிரத்திற்கான காசோலையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் IAS அவர்களிடம் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் உதவி கோரிய மாற்றுத்திறனாளி சரவணன் உடனிடருந்தார்.
