சென்னை: சென்னை மட்டுமல்ல... தமிழ்நாடு முழுவதும் கொஞ்சம் கவனிங்க சார்?

sen reporter
0


 தலைநகர் சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக ஆறு உதவி ஆய்வாளர்கள், பதினாறு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில்போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும்

ஒழிக்கவும், கடத்தல் கும்பலை பூண்டோடு கைது செய்யவும் "ட்ரைவ் அகைன்ஸ்ட் ட்ரக் " எனும் திட்டத்துடன் சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


அதன்படி ரகசிய கண்காணிப்பில் சிக்கிய ஆறு உதவி ஆய்வாளர்கள் மற்றும் பதினாறு காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல்துறை ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


ஆய்வாளர்கள்,உதவி ஆணையர்கள் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யாரும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் பாரபட்சம் காட்டுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top