நாட்டின் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய தலைமைக்காவலர் ப.மாரியப்பன் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கமானது தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா IAS, அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தலைமைக் காவலர் மாரியப்பன் அவரின் செயல் கண்டு ஏற்கனவே மக்களின் பராட்டுக்கள் குவிந்ததை தொடர்ந்து தற்போது பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டதால் தேனி மாவட்ட மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
.jpg)