தேனி மாவட்டம் நாகையகவுண்டன்பட்டி ஊராட்சிமன்ற கிராமசபை கூட்டம்!!!
1/27/2024
0
75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் நாகையகவுண்டன்பட்டி ஊராட்சிமன்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டமானது ஊராட்சிமன்ற தலைவி தீபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான என்.ஆர்.சிவாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் சார்பில் அனைத்து வார்டுகளிலும் உள்ள குறைகளையும், பொதுமக்களின் தேவைகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்க ஏரியா சபா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
