நீலகிரி மாவட்டம் ஊட்டி(உதகை)என்பது சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த சுற்றுலா தளத்திற்கு மே,ஜீன்மாதம் மற்றும்அக்டோபர்-நவம்பர்ஆகியமாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவர்.
சாதாரணநாட்களில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களில்இருந்து காலை நேரங்களில் வேலைக்கு செல்ல மக்கள் டவுனிற்கு அதிகம் வருகை தரும்போது அரசு மற்றும் மினி பேருந்தை பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் நேரம் மற்றும் போட்டியின் காரணமாக அரசு பேருந்தை மறித்து பயணிகளை ஏற்றிச்செல்லுவதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனால் கடும் போக்குவரத்து மற்றும் நேரம் கடந்து வேலைக்கு செல்லும் சூழல் இருப்பதாகவும் ,மாணவ மாணவியர் நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும்,இந்த பிரச்சினை தொடந்து நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்கதைக்கு சம்பந்தபட்டதுறை முற்றுப்புள்ளி வைக்குமா?
என மிகுந்த வேதனை கலந்த எதிர்பார்ப்போடு தெரிவிக்கின்றனர்.
