வேலூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!
வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி வடக்கு பகுதி 19 ஆவது வட்டம் சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பகுதி செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். இதில் திமுக செயற்குழு உறுப்பினர் ஏழுமலை மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த திமுக முன்னோடிகள் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
