வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி ஒடுகத்ததூர் பேரூராட்சி குருராஜபாளையம் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு ,ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன், பேரூராட்சி சேர்மன் சத்தியவதி பாஸ்கரன், பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் என்.பிரகாஷ், வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
குருராஜபாளையத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்ட அடிக்கல் நாட்டு விழா!
3/15/2024
0
