பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமத் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் பேராசிரியர் எம்.பிரபாத் குமார், முன்னாள் ஸ்டேட் வங்கி மேலாளரும், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவருமான எம். சுந்தரேசன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் முன்னாள் ராணுவ வீரர் என். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .விழாவிற்கு வந்தவர்களை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் டி.பரிதா பிரேமா வரவேற்றார். இக்கூட்டத்தில் திருவண்ணாமலை சமூக சுகாதார இயக்குனர் ஆர்.டி. என். டாக்டர் கே. சாய் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.