தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சாத்தனூர் கிராமத்தில் அபி என்பவரது தைலந்தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசாரை
சூதாடி கொண்டிருந்த நபர்கள் பணி செய்ய விடாமல் தடுத்த பத்து நபர்களில் நான்கு நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் மற்ற ஆறு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, ₹ 30,250/- ரூபாய் பணம் மற்றும் எட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து ஆறு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

