வேலூர்: பெரணமல்லூர் அருகே செல்வ விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்.

sen reporter
0


பெரணமல்லூர் அடுத்த மோட்சவாடி பகுதியில்  புனரமைக்கப்பட்ட செல்வ விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகம் முன்னிட்டு நேற்று முன்தினம்  யாகசாலை அமைக்கப்பட்டு மகாகணபதி ஓமம் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் நேற்று காலை 7மணிக்கு கோபூஜை, கஜபூஜை, தம்பதிபூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. மேலும் மகாசங்கல்பமும் மகாபூர்ணாஹூதியும், 10.10 மணிக்குமேல் மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாகசாைலயிலிருந்து கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து 10.25மணிக்கு வேதமந்திரங்கள் கூறி செல்வ விநாயகர் கோயில்  கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top