நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி...தினமும் கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமான ரயில் நிலையம் இங்கு விரைவு வண்டியும் நின்று செல்கிறது டிக்கெட் வசூலிலும் விரைந்து முன்னேறி கொண்டு வருகிறது ரயில் நிலையம் 100 மீட்டர் அருகில் பஸ் நிலையம் மிக வேகமாக வளர்ந்து வரும் ரயில் நிலையம் ஆனால் பயணிகளுக்கு ஏற்ப வசதி இங்கு கிடையாது பயணிகள் நிழற்குடை குடிநீர் வசதி பாத்ரூம் வசதி இதையெல்லாம் செய்து தருவாங்களா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் ரயில் நிலைய பயணிகள் செங்கோட்டை நெல்லை செங்கோட்டை வழியே செல்லும் பாசஞ்சர் ரயில் அனைத்தும் குறைவான எண்ணிக்கையுடன் பெட்டிகள் இருக்கின்றது கண்டு கெ கொள்ளாத அதிகாரிகள் இதில் தினமும் பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள்தான் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன சில முறை விபத்தும் நடந்து வருகின்றன இதை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு மதுரை கோட்டம் இந்த ரயில்வே நிலையத்திற்கும் ரயில் பயணிகளுக்கும் உதவுமா என்ற ஏக்கத்துடன் இரயில் பயணிகள் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நடை மேடையில் அடிப்படை வசதியில்லதால் பயணிகள் வேதனை!
9/08/2024
0
