இருந்தபோதிலும் பல விவசாயிகளிடம் மின்சார வாரியம் அனுமதி பெறாமல் விவசாய பூமிக்குள் மின்சாரம் செல்ல மின்சார பணிகள்
மேற்கொள்ளப்படுவதாகவும், உடனடியாக விவசாய விளை பொருட்களை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றும் அலை பேசியில் பல விவசாயிகளை மின்சார அதிகாரிகள் அடிக்கடி மிரட்டி வருகிறார்கள். இதனால் திடீரென அமைக்க உள்ள மின்கோபுரத்தால் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்படுவதோடு பல லட்சம் ரூபாய் பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .
அது மட்டுமல்ல தற்பொழுது விவசாய பூமிகளில் பாக்கு, தென்னை, மஞ்சள், வாழை மற்றும் மிளகாய் போன்ற நீண்டகால பண பயிர்களை வைத்திருக்கிறார்கள்.
அவ்வாறான பயிர்கள் உடனே அகற்றப்படுத்த விவசாயிகளிடம் மின்வாரியம் தெரிவிப்பதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..
