சென்னை:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் எஸ்றா சற்குணம் உடலுக்கு நேரில் அஞ்சலி!!!

sen reporter
0


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் திரு. எஸ்றா சற்குணம் அவர்களின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சென்னை, வானகரத்திற்கு இன்று  நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு

ஆறுதல் கூறினார். உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜோசப் சாமுவேல், திரு. க. கணபதி, இந்திய சுவிஷேச திருச்சபை (ECI) பிரதம பேராயர் டாக்டர் டேவிட் ஒநேசிமு, சென்னை பேராயர் கதிரொளி மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top