சென்னை: கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!!!
October 01, 2024
0
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. கே. கோபால் இ. ஆ. ப. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் இ. ஆ. ப.துறையின் கூடுதல் இயக்குனர்கள், மண்டல இணை இயக்குனர்கள்,மற்றும் தலைமை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.